“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

220408 குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் இலவச விநியோகம்!




மன்னர் பஹத் காம்லக்ஸிலிருந்து இறை வேதமான குர்ஆனின் மொழி பெயர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக சவுதியிலும் மற்றும் உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்த வருடம் ரமலானில் மாத்திரம் 220408 காப்பிகள் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டது ஹிஜ்ரி 1405 ல். இந்த முப்பது வருடங்களில் இது வரை இந்த அமைப்பானது மொத்தம் 275017360 காப்பிகளை உலகம் முழுக்க அனுப்பியுள்ளது. இதோடு அல்லாமல் ஆதாரபூர்வமான ஹதீது கிரந்தங்கள் புகாரி, முஸ்லிம், அபூதாவுது போன்ற நபியவர்களின் சொற்களும் செயல்களும் புத்தகங்களாக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. 

 

தகவல் உதவி:
அல்ரியாத்.காம்
23-08-2014

இது போன்ற சிறந்த செயல்களை சவுதி அரசு செய்யும் போது நாம் பாராட்ட வேண்டும். இறைவன் இந்த ஆட்சியாளர்களுக்கு குர்ஆனின் கட்டளைகளின்படி சவுதி அரேபியாவை கொண்டு செல்ல அதுவும் உலக முடிவு நாள் வரை இப்பணி தொடர நாமும் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment