“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

நபிகளாரின் தஹ்னீக்

நபி(ஸல்) அவர்கள் குழந்தைகள் விடயத்தில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தும் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். தஹ்னீக் என்பது ஈத்தப்பழம் அல்லது இனிப்பான ஒரு பொருளை வாயில் மென்று மென்மைப்படுத்தி பிறந்த குழந்தையின் வாயில் வைப்பதைக் குறிக்கும். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு குழந்தைகளுக்குச் செய்து அவர்களின் பரகத்திற்காக துஆவும் செய்துள்ளார்கள். இவ்வாறு இனிப்பூட்டுவது குழந்தைகளுக்கு நலனளிக்கின்றது. என்றும் அவர்களின் தாங்கும் சக்தியை அதிகரிக்கின்றது என்றும் நவீன மருத்துவம் கூறுகின்றது.


குழந்தை பிறந்த உடன் பேரித்தம்பழத்தை மெண்டு அதன் வாயில் தடவும் வழமை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.
(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸ‏þபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபி (ஸல்) அவர்களது உமிழ் நீரே ஆகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (3910)

எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரித்தம்பழத்தை மெண்டு அதன்வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : புகாரி (5467)

இன்று, 1400 ஆண்டுகளுக்குப் பிறகு - "வல்லுநர்கள்" கூறியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது (https://www.bbc.com/news/health-24224206)
முன்கூட்டிய குழந்தைகளை மூளை பாதிப்புக்கு எதிராக பாதுகாக்க ஒரு ஜெல் கன்னத்தின் (வாயின்) உட்புறத்தில் தேய்த்தால் (உட்கொள்ள) கொடுக்கப்பட்ட சர்க்கரை ஒரு மலிவான மற்றும் பயனுள்ள வழியாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆபத்தான முறையில் குறைந்த இரத்த சர்க்கரை மிக விரைவில் பிறந்த 10 குழந்தைகளில் ஒருவரை பாதிக்கிறது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது நிரந்தர தீங்கு விளைவிக்கும்.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பராமரிப்பில் உள்ள 242 குழந்தைகளுக்கு ஜெல் சிகிச்சையை பரிசோதித்தனர், முடிவுகளின் அடிப்படையில், இது இப்போது முதல் வரிசை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அவர்களின் படைப்புகள் தி லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
சர்க்கரை டோஸ்
டெக்ஸ்ட்ரோஸ் ஜெல் சிகிச்சையானது ஒரு குழந்தைக்கு 1 டாலருக்கும் அதிகமாகும், மேலும் குளுக்கோஸை விட ஒரு சொட்டு மருந்து மூலம் நிர்வகிப்பது எளிது என்று ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் ஹார்டிங் மற்றும் அவரது குழு கூறுகிறது.




தற்போதைய சிகிச்சையில் பொதுவாக இரத்தத்தில் சர்க்கரை அளவை அளவிட கூடுதல் உணவு மற்றும் மீண்டும் மீண்டும் இரத்த பரிசோதனைகள் அடங்கும்.
ஆனால் பல குழந்தைகள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் இரத்த சர்க்கரை குறைவாக இருப்பதால் நரம்பு குளுக்கோஸ் கொடுக்கப்படுகிறார்கள் - ஒரு நிலை மருத்துவர்கள் இரத்தச் சர்க்கரைக் குறைவு என்று அழைக்கிறார்கள்.
இரத்தச் சர்க்கரைக் குறைவை மாற்றியமைப்பதில் தனியாக உணவளிப்பதை விட டெக்ஸ்ட்ரோஸ் ஜெல் உடனான சிகிச்சை மிகவும் பயனுள்ளதா என்பதை ஆய்வு மதிப்பீடு செய்தது.
லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் உள்ள பெண்கள் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த நீல் மார்லோ, டெக்ஸ்ட்ரோஸ் ஜெல் பயன்பாட்டில் இல்லை என்றாலும், இந்த கண்டுபிடிப்புகள் இது ஒரு சிகிச்சையாக உயிர்த்தெழுப்பப்பட வேண்டும் என்று கூறியது.
அது மதிப்புக்குரியது என்பதற்கான உயர் தரமான சான்றுகள் இப்போது எங்களிடம் உள்ளன, என்றார்.
முன்கூட்டிய குழந்தை தொண்டு பேரின்பத்தின் தலைமை நிர்வாகி ஆண்டி கோல் கூறினார்: "இது ஒரு புதிய ஆராய்ச்சியின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி, மேலும் முன்கூட்டியே அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான விளைவுகளை மேம்படுத்தும் திறன் கொண்ட எதையும் நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்.
"இது ஒரு செலவு குறைந்த சிகிச்சையாகும், மேலும் இது ஏற்கனவே அதிக திறன் மட்டத்தில் செயல்பட்டு வரும் தீவிர சிகிச்சை சேவைகளுக்கான சேர்க்கைகளை குறைக்கக்கூடும்.
"இந்த ஆராய்ச்சியின் ஆரம்ப முடிவுகள் குறைந்த இரத்த சர்க்கரைகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு நன்மைகளைக் காண்பிக்கும் அதே வேளையில், இந்த சிகிச்சையைச் செயல்படுத்த அதிக ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது என்பது தெளிவாகிறது."

The Sunnah of Tahneek

Health in Islam is a state of dynamic equilibrium between body, mind and soul (rooh). Imbalance in this equilibrium leads to ill health. The maintenance of this balance is as prescribed in the Qur’an. Allah Ta’ala says:

‘We send down (stage by stage) of the Qur’an that which is a healing and mercy to those who believe.’ (17:82)

The words of Rasulullah (sallallahu alayhi wasallam) prescribing medicine are specific and yet all encompassing. The Sunnah (way of life or example) pertaining to health are numerous and comprehensive, relating to preventative, curative and restorative aspects of health. There are great lessons in health for us in the Prophet’s (sallallahu alayhi wasallam) eating habits, sleeping habits, personal hygiene, fasting and every aspect of life.

The Sunnah of putting something sweet in a newborn’s mouth has special pain relieving properties which are proven scientifically. 

It is a long established practice among Muslim parents to put a piece of well chewed date (or other available sweet fruit) in the mouth of a new born baby. Muslims do this following the practice of the Prophet Muhammad (sallallahu alayhi wasallam), believing him to be, as the Qur’an says, sent as a healing and as a mercy to mankind. We may infer from the way which this custom originated that there is a virtue in it. Complimentary to the virtue and pleasure of following the Sunnah (the practice of the Prophet (sallallahu alayhi wasallam) placing a ‘sugary substance’ inside the mouth of a new born baby dramatically reduces pain sensation and heart rate. An interesting scientific medical study, published in the British Medical Journal (No 6993,10 June 1995), proved beyond any doubt the benefit of giving a newborn child sugar, in order to reduce the feeling of any painful procedure like heel pricking for a blood sample or before circumcision.

The study, entitled ‘The analgesic effect of Sucrose in full term infants: a randomise controlled trial’, was done by Nora Christopher Wood, Gillian Griffiths and Malcolm Levene, in the post-natal ward in the Leeds General Infirmary in England. 60 healthy infants of gestational age 37-42 weeks and post-natal age of 1-6 days, were randomised to receive 2ml of one of the four solutions: - 12.5% sucrose, 25% sucrose and sterile water (control).

The first group of thirty babies received Sugar syrup before a routine blood test (heel pricking, which is usually painful) done to detect jaundice.

The other 30 babies were given only sterile water as a control group. Placing 2ml of a 25% or 50% sucrose solution on the tongue before pricking the heel significantly reduced the crying time, compared to babies who got water.

In addition, their heart rate returned to normal more quickly. The stronger sugar solution had the greater effect, crying reduced further with increasing concentration of sucrose. From which we may conclude that sucrose (sugar), placed on the tongue may be useful and safe form of analgesia for use with newborn infants.

Blass and Hoffmeyer also showed that 12% solution of inter-oral sucrose significantly reduced the duration of crying in newborn babies subjected in new heel pricking, or circumcision. This study was reported in the Independent newspaper (Friday, 9 June 1995) as well as in the British Medical Journal article.

The practice of the Prophet (sallallahu alayhi wasallam) is recorded in the collections of his sayings and reports about him, of which the most revered are the two Saheeh collections of Bukhari and Muslim: Abu Buradah reported from Abu Moosa (radhiallahu anhu), who said: ‘I had a newborn baby, I took him to the Prophet Muhammad (sallallahu alayhi wasallam) who called him Ibraheem. The Prophet (Sallallahu alayhi wasallam) chewed a date then he took it and rubbed the inside of the baby’s mouth with it.’

The date contains the very high percentage of sugar (70-80%); it has both fructose, and glucose, which have high calorific values, it is easily and quickly digestible, and very helpful to the brain. The date contains 2.2% protein, vitamin A, vitamins B1, B2 Anicotruic acid (against Pellagra); and it has traces of minerals needed for the body such as potassium, sodium. Calcium, iron, manganese and copper.

Potassium. Of which percentage is very high, has been found to be very effective for cases of haemorrhage, such as the occasions of birth or circumcision.

We may note that the Sunnah also commends dates for the breaking of the fast in Ramadhaan. Dates should be eaten, if available before the sunset prayer, this is medically and nutritionally the best way and the Sunnah.

The great worth of dates is also indicated in the famous and beautiful passage of the Qur’aan, Surah Maryam: ‘And shake towards you the trunk of the palm tree and it will drop on you fresh ripe dates. So eat, drink, and be comforted.’

This was the prescription of Allah, the Creator, for Maryam (alayhas salaam) at the time of the birth of Eesa (alayhis salaam), The blessed Prophet of Allah. It was a prescription to make a delivery easy and comfortable. As in the example, we have briefly recorded, we believe further research will confirm for those who still doubt the full worth and truth, the wisdom of the teachings of the Qur’aan and Sunnah.
‘We shall show them our signs on the furthest, horizons and within themselves until it becomes clear to them that it is the truth. Is it not sufficient that your Lord is witness over all things?’ (41:53)
Source: Riyadhul Jannah (UK)

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038
ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34
(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)

எய்ட்சிலிருந்து காக்கும் கத்னா

எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான்.

கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம்.

இந்த இயற்கை அமைப்பில் உட்பட்டவன் தான் மனிதன். அவனுடைய உடல் வளரும் தலை முடி, தாடி, மீசை மற்றும் இதர பகுதிகளில் வளரும் முடிகள், நகம் அனைத்துமே இயற்கைக்கு உட்பட்டது தான்.

மனித உடல் அமைந்திருக்கும் இந்த இயற்கை அமைப்பைப் பராமரிப்பதும் ஓர் இயற்கையான அம்சம் தான். இதை உலகில் எந்த மார்க்கமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. காரணம், அந்த மார்க்கங்கள் இயற்கையானவையல்ல!

இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம். அதனால் தான் இயற்கை நெறிகளைக் கற்றுக் கொடுக்கிறது.

''இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர )

நூல்: புகாரி
 5891

ஹெச்.ஐ.வி. எய்ட்சும், இயற்கை கத்னாவும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இயற்கையான இந்த ஐந்து அம்சங்களில் கத்னா எனும் விருத்த சேதனமும் ஒன்றாகும்.

இந்த கத்னா, இன்று எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸை விட்டும் காக்கும் காப்பரணாகத் திகழ்கிறது.

22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி இதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.


ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ் ம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்­மல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில்
60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்தி­ருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ் லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.

அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பையும் இங்கே பார்ப்போம்.

ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது எனறு அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளி ருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இங்கு தான், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதை அறிந்து நாம் வியப்பில் ஆழ்கிறோம். இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில்
30:30 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

மேலே நாம் கண்ட அந்த ஹதீஸ் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

இன்று உலகில் பலர் தாடியை முழுமையாக மழித்து விட்டு மீசையை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மீசை உண்மையில் வாயில் ஒரு வடிகட்டியைப் போல் அமைந்துள்ளது. அவர்கள் குடிக்கின்ற பானங்கள், சாப்பிடும் பண்டங்கள் அனைத்தும் மீசையில் பட்ட பின்னர் தான் உள்ளே செல்கின்றது.

சளி மற்றும் அசுத்தங்கள் தங்கி நிற்கும் இந்த மீசை வழியாக உணவுப் பொருட்கள் செல்வது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்பதால் இதைத் தடுக்கும் விதமாக, மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

இது போன்று உடல் நாற்றத்திற்குக் காரணமாக அமையும் அக்குள் முடிகளையும், இன உறுப்பின் முடிகளையும் களையச் சொல்கிறது.

நகங்களின் இடுக்குகள் தான் கிருமிகள் அடைக்கலம் புகுமிடம் என்பதால் நகங்களையும் வெட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

இவற்றை வளர்ப்பது இயற்கையல்ல, களைவது தான் இயற்கை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.




இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.
இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.
குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.
பெருவெடிப்புக் கொள்கை:
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,
1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.
2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.
3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.
– என்பதாகும்.
அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.


protoncollision
(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.


படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்
படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.


இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்
படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள் 



தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். ( குர்ஆன், 2 :233)

கடந்த புதனன்று (11.4.2018) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை :

குழந்தைகள் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அவசியம். பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால், நோய் தொற்றுகளிலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் குழந்தையைக் காக்கலாம்.

தாய்ப்பால் ஊட்டாமல் விட்டால், அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினால், வயிற்றுப்போக்கு, இதர நோய் தொற்றுகள் காரணமாககப் பச்சிளங்குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உண்டு.

பிறந்தது முதல் 2 ஆண்டுகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினால், 5 வயதுக்குட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை ஆண்டுதோறும் தடுக்க முடியும்.

தாய்ப்பாலால் குழந்தையின் கவனம், அறிவுத் திறன் மேம்படும். தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும்.

இவ்வாறு யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
( தி இந்து தமிழ், 13.4.18)

தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள்

U.S Agency For Healthcare Research and Quality (AHRQ), World Health Organization (WHO) போன்ற நிருவணங்கள் 2007 இல் மேற்கொண்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் ஊடாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதன் மூலம் அதிக பயன்கள் ஏற்படுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானதைக் கீழ்வருமாறு சுருக்கித் தருகிறோம்.

o நோய் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய சிறந்த ஆரோக்கியம்.

தாய்ப்பாலூட்டும் போது கிருமிகளை அழிக்கக் கூடிய பொருட்கள் குழந்தையின் உடலினுள் செலுத்தப் படுகின்றது. தாய்ப்பால் கிருமிகளைப் பரவச் செய்வதைத் தடுக்கக்கூடிய பல்வேறு பதார்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக அமீபிய நுண்ணுயிர்கள் பரவுவதைத் தடுக்கக்கூடிய டிடைந ளயடவ ளவiஅரடயவநன டipயளநஇ குடலில் ஏற்படும் பக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, இரும்புச் சத்தை வழங்கக் கூடிய டயஉவழகநசசinஇ மிகச் சிறிய உயிரினங்கிளிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய iஅஅரழெபடழடிரடin என்பவற்றைக் கூறலாம். (Glass RI,....(1983) "Protection against cholera in breast-fed children by antibodies in breast milk")

o மிகக் குறைவான நோய்த்தாக்கம்.

தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் தாய்ப்பாலூட்டப்படாத குழந்தைகளை விட நோயுடைய தாக்கம் பெறும் வீதம் மிகக் குறைவாக உள்ளது. 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆரம்ப ஏழு மாதங்கள் தாய்ப்பாலூட்டப்பட்ட

பிள்ளைகளுக்கு சிறுநீரக நோய் பரவும் வீதம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. (Marlid s,....(2004) "protetive effect of breast feeding against urinary tract infection")

o உயர் நுண்ணரிவு.

தாய்ப்பாலூட்டல் குழந்தைகளின் அறிவு மட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றதா என மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குழந்தைகளின் சிந்தனைத் திறன், புத்தி சாதூர்யத்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். எனக் கூறுகின்றன. WHO 2007 இல் மேற்கொண்ட ஆய்வில் 'தாய்ப் பாலூட்டப்பட்ட பிள்ளைகளின் நுண்ணரிவுப் பரீட்சைகளில் உயர்தரத்தை வெளிப்படுத்தினார்கள்' என்ற முடிவு பெறப்பட்டது.

(Horta BL,...(2007), Evedence on the long-term effects of breast feeding: systematic reviews and meta-analyses, geneva, WHO).

o பிற்பட்ட கால சுகாதார விளைவுகள்.

சிறு குழந்தையாக இருக்கும் போது பாலூட்டிருந்தால் வளர்ந்த பெரியவரானதும் பல விளைவுகள் சாதகமாக அமைந்து விடுகின்றன. தாய்ப்பால் ஆரஉiளெ எனும் ஒருவகை எதிர்ப்புப் பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவை அதிக புரதங்களையும் காபோவைதரேற்றுக் களையும் உள்ளடக்கியவையாகும். அவை பக்டீரியாக்களுனும் வைரஸ்களுடனும் ஒட்டிக் கொண்டு, இறுதியில் இரசாயன மருந்துகளுக்கு மாற்றமாக - எந்தவிதமான பக்கவிளைவுகளுமின்றி அவற்றை முற்றாக அழித்து விடுகின்றன.

தாய்ப்பாலூட்டப்பட்ட பிள்ளைகளுக்கு மிகக் குறைவாகவே ஆஸ்த்மா, ஒவ்வாமை (Allergic) நோய்கள் ஏற்படுவதோடு சுவாச நோய்கள், வயிற்று நோய்கள் என்பவற்றுக்கு எதிராகவும் தாய்ப்பால் செயற்படுகின்றது.

(Mead MN (2008) "Contaminants in human milk: weighing the risks against the benefits of breast feeding").

சிறுவயதில் தாய்ப்பாலூட்டப்பட்ட பெண்களுக்கு தாய்ப்பாலூட்டப்படாத பெண்களை விட மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனக் கண்டுபிடித்தது.

(Nichols HB,...(2008) "effects of birth order and maternal age on breast cancer risk: modification by whether women had been breast-fed")

பசுப் பாலில் தாய்பாலில் உள்ளதைவிட இரு மடங்கு புரதம் உண்டு. அதனால் அந்தப் புரதத்தின் அளவை அப்படியே உறிஞ்சி எடுத்து, குழந்தை அதனது உடலில் சேமித்து வைத்துக் கொள்ளமுடியாது. அதன் காரணமாக கொழுப்பதோடு தொடர்பான நோய்கள் எதிர்காலத்தில் தோன்றுகின்றன. அதே நேரம் தாய்ப்பாலில் உள்ள புரதத்தைக் குழந்தை முழுமையாக 100 வீதத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றது. அதே போன்று அக்குழந்தை தாய்ப்பாலில் இருந்து எடுத்த புரதத்தை சமிபாடடையச் செய்வதற்கு 15 நிமிடங்கள் எடுக்கின்றது. அதே வேளையை பசுப்பாலின் மூலம் செய்வதற்கு 60 நிமிடங்கள் எடுக்கின்றது. எனவே, தாய்ப்பால் நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்துகின்றது .

  தாய்ப்பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பயன்கள்

தாய்ப்பாலூட்டுவதன் மூலம் குழந்தைக்கு மாத்திரமின்றி பாலூட்டும் தாய்க்கும் பல பிரயோசனங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

30 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தனது மார்பகத்திலுள்ள பாலை ஊட்டும் தாய்மார்கள் குறைவாகவே மார்பகப் புற்றுநோய்க்கு ஆட்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Jernstorm, H, "Breast-feeding and the risk of breast cancer in BRCA 1 and BRCA 2 Mutation carriers ")

தாயின் கர்ப்பப்பை மகப்பேறு, பிரசவத்தின் போது 20 மடங்கு விரிவடைகின்றது. இயற்கையான பாலூட்டல் அந்தக் கர்ப்பப்பையை இயல்பான அளவுக்கு மீட்டிக் கொண்டு வந்து விடுகின்றது எனவும் தனது பிள்ளைக்கு தாப்பாலூட்டாத தாயுடைய கர்ப்பப்பை சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும் எனவும் தாயப்பாலூட்டல் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தாய்ப்பாலூட்டல் தாயின் எடையைக் குறைப்பதற்கும் கொழுத்தலை விட்டும் காப்பதற்கும் உதவுவதோடு இயற்கையான ஒரு மனநிம்மதியை அது வழங்குகின்றது. அதனால் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கின்ற அதேவேளை தாயும் நன்கு தூங்குவதற்கு வாய்ப்பேற்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கூடுதலான காலப்பகுதி பாலூட்டுகின்ற பெண்மணி (ஆகக் குறைந்தது 24 மாதங்கள்) மிகக் குறைவாகவே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றாள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. (Gunderson, Erica P (2009) "Prospective evidence that lactation protects against cardiovascular disease in women")

அதே போல சர்க்கரை நோய்  உள்ள தாய்மார்கள் பாலூட்டும் போது மிகக் குறைவான இன்சுலின் தேவைப்படுகின்றது. (Rayburn w,...."changes in insulin therapy during pregnancy"). அத்தோடு Malmo University, 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வொன்றில், நீண்ட காலம் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்குக் குறைவாகவே வாதத்தோடு கூடிய முழங்கால் வீக்கம் (Rheumatiod arthrits) ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Pikwer M,...(2009) "Breast feeding, but not use of oral contraceptives, is associated with a reduced risk of rheumatoid arthritis").

தாய்ப் பாலூட்டுவதால் ஏற்படும் சமூகப் பயன்கள்

தாய்ப்பாலூட்டுவதனூடாக அதிகமான நற்பயன்கள் சமூகரீதியாகவும் ஏற்படுகின்றன. இன்று செயற்கைப் பாலூட்டல் போன்று இயற்கைப் பாலூட்டல் வலியுறுத்தப் படுவதில்லை. சிறுவர் வைத்தியத்திற்குரிய அமெரிக்க எகடமி கூறும் கீழ்வரும் தகவல் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஐக்கிய அமெரிக்கா மாத்திரம் இந்த இயற்கையான பாலூட்டலைப் பின்பற்றுமாயின் அது வருடாந்தம் 3600 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்த முடியும். இதன் மூலம் பெரும் பொருளாதார வளத்தை, பல அபிவிருத்தி திட்டங்களுக்குச் செலவிடலாம்.

தாய்ப்பாலூட்டல் சூழல் பாதுகாப்புக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புட்டிப் பால் பொதி செய்வதற்காக தகர, கண்ணாடி போத்தல்கள் உற்பத்தி செய்வதனூடாகவும் பசுப்பாலை உலர்த்துவதனூடாகவும் ஏற்படும் சூழல் மாசடைவு புட்டிப்பாலை பாவித்ததன் பின்னர் அதன் தகர, கண்ணாடிக் குவலைகளால் ஏற்படும் பாதிப்பு என்பன சமூக ரீதியாகப் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

வில்லியம் மெக்டோகல் எனும் அறிஞர் கூறும் போது, 'இன்றைய சமூகம் புட்டிப்பாலின் அடிப்படையில் வளர்ந்துள்ளதையே நான் காண்கின்றேன். எனவே வன்முறைகளும் விரக்தியும் உறவுகளில் பூசலும் ஜீவகாருண்ய மின்மையும் வெளிப்படவே செய்யும். குழந்தை பால் குடிக்கும் போத்தலை சட்ட ரீதியாக தடைசெய்யும் போதுதான் இப்பிரச்சினைகள் தீரும்' என்கின்றார்.

 தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி

தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி தொடர்பாக சர்வதேச சுகாதார நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் பாலருந்தும் குழந்தைகளிடத்தில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் அது இரண்டு வருடங்களாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளன. ஏனெனில் குழந்தையின் முதலிரு வருடங்களில் தாய்ப்பாலின் மீது மிக முக்கிய தேவையுடையதாக அது இருக்கும். இரு வருடங்களுக்கு முன்பு அதன் உறுப்புக்களால் தானாக எதிர்த்து நிற்க முடியாது.

உலக சுகாதார நிறுவனம் 2001 ஆம் ஆண்டு "Complementary feeding" என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடாத்தியது. அதன் இறுதியில் பின்வருமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

"The first two years of a child’s life are a critical window during which the foundations for healthy growth and development are built. Infant and young child feeding is a core dimension of care in this period"

"ஒரு குழந்தையின் வாழ்வில் முதலிரு வருடங்கள் என்பது அதனது ஆரோக்கியமான வளர்ச்சி, விருத்தி கட்டியெழுப்பப்டும் மிக முக்கியமான காலப்பகுதியாகும்.

குழந்தையும் சிறு பிள்ளையினதும் தாய்ப்பாலூட்டல் இக்காலப்பகுpதியில் அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய அம்சமாகும். "(Complementary feeding, Report of the global consultation, Geneva, 10-13 December,2001)"

அல்-குர்ஆன் சூறதுல் பகரா - 233 ஆம் வசனத்தில் விபரித்துள்ள கருத்துக்களையே மேற்சொன்ன அறிக்கையும் விபரிப்பதைக் காணலாம்.

இந்த வகையில் அல்-குர்ஆன் மிகத் தெளிவாக முன்வைக்கும் தாய்ப் பாலூட்டுவதற்கான கட்டளையை, பிள்ளைக்கான அந்த உரிமையை கட்டாயமாகத் தாய்மார்கள் பின்பற்ற வேண்டும். நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இக்கருத்தை அறிவியல் பூர்வமாகவே நிறுவுகின்றன. எனவே, இவற்றை சீர்தூக்கிப் பார்த்து, தாய்மார்கள் செயற்படுவதற்கு தாய்மார்கள் முன்வருவார்களாக.

புதையுண்டு போன'ஆத்' சமுதாயத்தினர்


(நபியே) இவை(சிற்)சில ஊர்களின் வரலாறுகள் ஆகும் இவற்றை நாம் உமக்கு எடுத்திரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன சில(அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின. (அல்-குர்ஆன் 11:100)

1990 ம் ஆண்டு ஆரம்பத்தில் மிக பிரபலமான பத்திரிக்கைகள், 'உபர்' என்ற பகுதியில் மணல் திட்டுகளுக்குள் சுமார் 12 மீட்டர் ஆழத்தில்."புதையுன்ட ஒரு அரபு நகரம் கண்டுபிடிக்கபட்டது" என்ற செய்தியை வெளியிட்டது. அது இறைவனின் கோபதிற்கு உள்ளான 'ஆத்' சமூதாயத்தினர் வாழ்ந்த நகரம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களாள் கண்டரிய பட்டது.
யார் அந்த 'ஆத்'சமூகத்தார்கள்?
நபி நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது 'ஆது' சமூகத்தினர்.
அவர்களுக்கு நபி ஹூத்(அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர்,தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இருந்தனர்,அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் வேறு எந்த நாட்டிலும் படைக்க படவில்லை. 

நபி ஹூத் (அலை) அவர்களும் மற்ற இறைதூதர்கள் போல இறைவன் ஒருவனே அவனையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற ஓர் இறை கொள்கையை அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைதப் போது. அவர்கள் அதை ஏற்காததும் அவர்களின் பதிலையும் குர் ஆனில் அல்லாஹ் கூருகிறான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது'' நீங்கள் (இறைவனை) அஞ்ச மட்டீர்களா? '' என்று கூறிய போது
'நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய (இறை) தூதன் ஆவேன்.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.

'மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்கு கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
'நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?''
'இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று,(அழகிய வேலைப்பாடுகல் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கிறீர்களா?.''
'' இன்னும், நீங்கள்(எவரையும் ஏதங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல பிடிக்கின்றீர்கள்.
'எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.''
னால் 'ஆத்' சமுதாயதினரின் பதிலோ 
(இதற்கு) அவர்கள் '' நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டிமே) எங்களுக்கு சமம்தான்'' எனக் கூறினார்கள்.
'இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
'' மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மா ட்டோம்.'' (இவ்வாறு கூறி) அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள் ஆதலின் நாம் அவர்களை அழித்தேம் நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. (26:124-140)
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து இறை தூதரை நம்ப மறுத்ததோ,அவர்களுக்கு எச்சரிக்கபட்டது போல இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கினான், 

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வேகமாக வருவதைக் கண்டதும்,'' இது நமக்கு மழையை பொழியும் மேகமாகும்'' என கூறினார்கள் ''அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அது தான்(இது கொடுங்)காற்று

இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது.(46:24)ஆத் கூட்டத்தார்கள் தங்களுக்கு வேதனை தரும் பேரழிவு கண்முன் கொண்டுவரபடுவது அறியாமல், அதை மழை தர கூடிய மேக கூட்டங்களாக நினைத்தனர் ஏனெனில் பாலை மணல் வெளியில் உருவாகும் சுழல் காற்றானது தொலைவில் இருந்து பார்பவைகளுக்கு அடர்ந்த மழை தரும் கார்மேகங்கள் போலவே கட்சி அளிக்கும். ஆராய்சியாளர் டோ(Doe) அவர்கள் கூறுகையில் , முதல் அரிகுறியாக மணல் ஆயிரம் அடிகளுக்கு மேல் கற்றில் உயர்த்த பட்டு நீண்ட சுவர் போன்ற தோற்றத்தை கொடுக்கும், பின்பு கற்றின் வேகம் அதிகரித்து வட்ட வடிவில் சூராவளி பெரும் ஓசையுடன் சுழழும்.
மேலும் அல்லாஹ் திருமறையில்
இன்னும்,ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்,எனவே அந்த சமுகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
ஆகவே, அவர்களின் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (69: 6,7,8)
மீளவே முடியாத பயங்கரமான சுழன்று அடித்த மணல் காற்றினால் அழிக்கபட்டு அச்சமுதாயத்தினர் மண்ணில் உயிருடனே புதையுண்டு போனார்கள். 


அகழ்வராய்ச்சியில் அந் நகரம் கண்டுபிடிக்கபட்டதை காண்போம்,
நிக்கோலக் க்லாப் இவர் ஒர் அனுபவமிக்க தொல்பொருள் ஆரய்ச்சியாளர் மட்டுமின்றி, திருமறையில் கூறப்பட்ட'ஆத்' சமூகத்தார் வாழ்ந்த(யுபர்) நகரை பெரும் முயற்சிக்கு பிறகு கண்டுபிடித்தவர் கூட,
அதற்க்கு அவர் இரண்டு வழிகளில் தன் முயற்சியை மேற்கொன்டார். ஒன்று NASA மூலம் குறுப்பிட்ட அந்த பகுதியை சாட்டிலைட் உதவியுடன் படம் பிடிக்க விண்ணப்பித்தார்,
இரண்டாவதாக கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான வி ளங்கங்கள்(manuscripts) பற்றி படிக்களானார்,எப்படியாவது அந்த நில அமைப்பின் வரைபடத்தை கண்டுபிக்கவேண்டும் என்பதின் முயற்சியின் பலனாக, கி.பி 200 ஆண்டு கிரீக்-எகிப்த் புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் அவருக்கு கிடைத்தது.

அதற்கிடையில் NASA வில் இருந்து அவர் கேட்ட சாட்டிலைட் புகைபடம் கிடைக்கவே.அதில் குறுப்பிட்ட நில அமைப்பில் நிலத்திலிருந்து வெரும் கண்களால் காண முடியாத, முழு நில அமைப்பையும் வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிய கூடிய நீண்ட வால் போன்ற தடம்(caravan) காணபட்டது,
அவரிடம் இருந்த பழைய வரைபடத்தயும் NASA வில் இருந்து கிடைத்த வால் பேன்ற அமைப்பான புகைபடத்தயும் வைத்து, குறுபிட்ட அந்த பகுதியில் ஒரு நகரம் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.



இருதியாக திருமறையில் கூறபட்ட 'ஆத்' சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுன்ட நகரம் தோன்டும் பனி தொடங்கியது.
சரி.. அந்த நகரம் 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என்பதற்கு என்ன ஆதாரம்?
அந்த நகரம் தோன்டும் பனி பாதி நிரைவடைந்த நிலையில் அது 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என கண்டறியபட்டது ,அகழ்வாரய்ச்சியா ளர் Dr.ஜரின்ஸ் கூருகையில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இது 'இரம்' நகரம் என்பதற்க்கு சான்றாகும் ஏனெனில்,' இரம்' நகரம் உயரமான் தூண்களை உடையதாக இருக்கும் என்று திருமறையில் அந்த நகரை பற்றி இறைவன் குறுப்பிடுகிறான்

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படக்கப்படவில்லை. (89:6-8)



மேலும் ஏழு இரவுகளும், எட்டு பகலாகவும் அவர்கள் மீது மணல் காற்றால் சூழபட்டார்கள் என்ற இறை வசனத்தின் படி. தோண்டி எடுக்கபட்ட நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடபட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.


'ஆத்' சமுதாயத்தை ,நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக, வல்ல இறைவன் திருமறையில் கூறுகிறான்
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாமாகப் பெருமையடித்துக் கொண்டு,'' எங்களை விட வலிமை மிக்கவர்கள் யார்?''என்று கூறினார்கள் அவர்களை படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
(Surah Fussilat:15) 


எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு, அவனின் கோபதிற்க்கு ஆலாகாத இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற சமுதாயமாக நம்மை ஆக்கவேண்டும் என் அல்லஹ்வை பிராத்திப்போமாக.