மூளை பற்றி திருக்குர்ஆன்
அப்படியல்ல! அவன் விலகிக் கொள்ளவில்லையானால் நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றியைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றியை. (திருக்குர்ஆன் 96:15-16).முன்னெற்றியை திருக்குர்ஆன் ஏன் தவறிழைத்து பொய்யுரைக்கும்| என்று கூறுகின்றது? அந்த மனிதர் தவறிழைத்து பொய்யுரைப்பவர் என்று திருக்குர்ஆன் ஏன் கூறிடவில்லை? தவறிழைத்து பொய்யுரைப்பதற்கும் முன் நெற்றிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
ஆகவே செரப்ரத்தின் இந்தப் பகுதிதான் திட்டமிடவும் தூண்டவும் நல்ல அல்லது கெட்ட செயல்களை தொடங்கவும் காரணமாக உள்ளது. அதுதான்; பொய் சொல்லவும் உண்மையை கூறவும்; காரணமாக உள்ளது. ஆகவே எவராவது ஒருவர் பொய்யுரைக்கும் போதோ அல்லது பாவம் செய்யும் போது திருக்குர்ஆன்; கூறியது போன்று அவரின் முன்நெற்றி தவறிழைத்து பொய்யுரைக்கின்றது என்று சொல்வது பொருத்தமானதாகும். தவறிழைத்து பொய்யுரைக்கும் நாஸியா (முன்நெற்றி)! கடந்த அறுபது வருடங்களுக்கு முன்புதான் அறிவியலாளர்கள் முன்நெற்றியின் இந்த செயல்பாடுகளை கண்டுபிடித்தனர் என்று பேராசிரியர் மூர் அவர்கள் கூறுகின்றார்கள்.
No comments:
Post a Comment