“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.
இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.
குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.
பெருவெடிப்புக் கொள்கை:
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,
1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.
2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.
3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.
– என்பதாகும்.
அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.


protoncollision
(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.


படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்
படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.


இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்
படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள் 



தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். ( குர்ஆன், 2 :233)

கடந்த புதனன்று (11.4.2018) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை :

குழந்தைகள் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அவசியம். பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால், நோய் தொற்றுகளிலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் குழந்தையைக் காக்கலாம்.

தாய்ப்பால் ஊட்டாமல் விட்டால், அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினால், வயிற்றுப்போக்கு, இதர நோய் தொற்றுகள் காரணமாககப் பச்சிளங்குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உண்டு.

பிறந்தது முதல் 2 ஆண்டுகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினால், 5 வயதுக்குட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை ஆண்டுதோறும் தடுக்க முடியும்.

தாய்ப்பாலால் குழந்தையின் கவனம், அறிவுத் திறன் மேம்படும். தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும்.

இவ்வாறு யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
( தி இந்து தமிழ், 13.4.18)

தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள்

U.S Agency For Healthcare Research and Quality (AHRQ), World Health Organization (WHO) போன்ற நிருவணங்கள் 2007 இல் மேற்கொண்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் ஊடாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதன் மூலம் அதிக பயன்கள் ஏற்படுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானதைக் கீழ்வருமாறு சுருக்கித் தருகிறோம்.

o நோய் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய சிறந்த ஆரோக்கியம்.

தாய்ப்பாலூட்டும் போது கிருமிகளை அழிக்கக் கூடிய பொருட்கள் குழந்தையின் உடலினுள் செலுத்தப் படுகின்றது. தாய்ப்பால் கிருமிகளைப் பரவச் செய்வதைத் தடுக்கக்கூடிய பல்வேறு பதார்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக அமீபிய நுண்ணுயிர்கள் பரவுவதைத் தடுக்கக்கூடிய டிடைந ளயடவ ளவiஅரடயவநன டipயளநஇ குடலில் ஏற்படும் பக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, இரும்புச் சத்தை வழங்கக் கூடிய டயஉவழகநசசinஇ மிகச் சிறிய உயிரினங்கிளிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய iஅஅரழெபடழடிரடin என்பவற்றைக் கூறலாம். (Glass RI,....(1983) "Protection against cholera in breast-fed children by antibodies in breast milk")

o மிகக் குறைவான நோய்த்தாக்கம்.

தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் தாய்ப்பாலூட்டப்படாத குழந்தைகளை விட நோயுடைய தாக்கம் பெறும் வீதம் மிகக் குறைவாக உள்ளது. 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆரம்ப ஏழு மாதங்கள் தாய்ப்பாலூட்டப்பட்ட

பிள்ளைகளுக்கு சிறுநீரக நோய் பரவும் வீதம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. (Marlid s,....(2004) "protetive effect of breast feeding against urinary tract infection")

o உயர் நுண்ணரிவு.

தாய்ப்பாலூட்டல் குழந்தைகளின் அறிவு மட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றதா என மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குழந்தைகளின் சிந்தனைத் திறன், புத்தி சாதூர்யத்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். எனக் கூறுகின்றன. WHO 2007 இல் மேற்கொண்ட ஆய்வில் 'தாய்ப் பாலூட்டப்பட்ட பிள்ளைகளின் நுண்ணரிவுப் பரீட்சைகளில் உயர்தரத்தை வெளிப்படுத்தினார்கள்' என்ற முடிவு பெறப்பட்டது.

(Horta BL,...(2007), Evedence on the long-term effects of breast feeding: systematic reviews and meta-analyses, geneva, WHO).

o பிற்பட்ட கால சுகாதார விளைவுகள்.

சிறு குழந்தையாக இருக்கும் போது பாலூட்டிருந்தால் வளர்ந்த பெரியவரானதும் பல விளைவுகள் சாதகமாக அமைந்து விடுகின்றன. தாய்ப்பால் ஆரஉiளெ எனும் ஒருவகை எதிர்ப்புப் பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவை அதிக புரதங்களையும் காபோவைதரேற்றுக் களையும் உள்ளடக்கியவையாகும். அவை பக்டீரியாக்களுனும் வைரஸ்களுடனும் ஒட்டிக் கொண்டு, இறுதியில் இரசாயன மருந்துகளுக்கு மாற்றமாக - எந்தவிதமான பக்கவிளைவுகளுமின்றி அவற்றை முற்றாக அழித்து விடுகின்றன.

தாய்ப்பாலூட்டப்பட்ட பிள்ளைகளுக்கு மிகக் குறைவாகவே ஆஸ்த்மா, ஒவ்வாமை (Allergic) நோய்கள் ஏற்படுவதோடு சுவாச நோய்கள், வயிற்று நோய்கள் என்பவற்றுக்கு எதிராகவும் தாய்ப்பால் செயற்படுகின்றது.

(Mead MN (2008) "Contaminants in human milk: weighing the risks against the benefits of breast feeding").

சிறுவயதில் தாய்ப்பாலூட்டப்பட்ட பெண்களுக்கு தாய்ப்பாலூட்டப்படாத பெண்களை விட மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனக் கண்டுபிடித்தது.

(Nichols HB,...(2008) "effects of birth order and maternal age on breast cancer risk: modification by whether women had been breast-fed")

பசுப் பாலில் தாய்பாலில் உள்ளதைவிட இரு மடங்கு புரதம் உண்டு. அதனால் அந்தப் புரதத்தின் அளவை அப்படியே உறிஞ்சி எடுத்து, குழந்தை அதனது உடலில் சேமித்து வைத்துக் கொள்ளமுடியாது. அதன் காரணமாக கொழுப்பதோடு தொடர்பான நோய்கள் எதிர்காலத்தில் தோன்றுகின்றன. அதே நேரம் தாய்ப்பாலில் உள்ள புரதத்தைக் குழந்தை முழுமையாக 100 வீதத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றது. அதே போன்று அக்குழந்தை தாய்ப்பாலில் இருந்து எடுத்த புரதத்தை சமிபாடடையச் செய்வதற்கு 15 நிமிடங்கள் எடுக்கின்றது. அதே வேளையை பசுப்பாலின் மூலம் செய்வதற்கு 60 நிமிடங்கள் எடுக்கின்றது. எனவே, தாய்ப்பால் நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்துகின்றது .

  தாய்ப்பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பயன்கள்

தாய்ப்பாலூட்டுவதன் மூலம் குழந்தைக்கு மாத்திரமின்றி பாலூட்டும் தாய்க்கும் பல பிரயோசனங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

30 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தனது மார்பகத்திலுள்ள பாலை ஊட்டும் தாய்மார்கள் குறைவாகவே மார்பகப் புற்றுநோய்க்கு ஆட்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Jernstorm, H, "Breast-feeding and the risk of breast cancer in BRCA 1 and BRCA 2 Mutation carriers ")

தாயின் கர்ப்பப்பை மகப்பேறு, பிரசவத்தின் போது 20 மடங்கு விரிவடைகின்றது. இயற்கையான பாலூட்டல் அந்தக் கர்ப்பப்பையை இயல்பான அளவுக்கு மீட்டிக் கொண்டு வந்து விடுகின்றது எனவும் தனது பிள்ளைக்கு தாப்பாலூட்டாத தாயுடைய கர்ப்பப்பை சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும் எனவும் தாயப்பாலூட்டல் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தாய்ப்பாலூட்டல் தாயின் எடையைக் குறைப்பதற்கும் கொழுத்தலை விட்டும் காப்பதற்கும் உதவுவதோடு இயற்கையான ஒரு மனநிம்மதியை அது வழங்குகின்றது. அதனால் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கின்ற அதேவேளை தாயும் நன்கு தூங்குவதற்கு வாய்ப்பேற்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கூடுதலான காலப்பகுதி பாலூட்டுகின்ற பெண்மணி (ஆகக் குறைந்தது 24 மாதங்கள்) மிகக் குறைவாகவே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றாள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. (Gunderson, Erica P (2009) "Prospective evidence that lactation protects against cardiovascular disease in women")

அதே போல சர்க்கரை நோய்  உள்ள தாய்மார்கள் பாலூட்டும் போது மிகக் குறைவான இன்சுலின் தேவைப்படுகின்றது. (Rayburn w,...."changes in insulin therapy during pregnancy"). அத்தோடு Malmo University, 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வொன்றில், நீண்ட காலம் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்குக் குறைவாகவே வாதத்தோடு கூடிய முழங்கால் வீக்கம் (Rheumatiod arthrits) ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Pikwer M,...(2009) "Breast feeding, but not use of oral contraceptives, is associated with a reduced risk of rheumatoid arthritis").

தாய்ப் பாலூட்டுவதால் ஏற்படும் சமூகப் பயன்கள்

தாய்ப்பாலூட்டுவதனூடாக அதிகமான நற்பயன்கள் சமூகரீதியாகவும் ஏற்படுகின்றன. இன்று செயற்கைப் பாலூட்டல் போன்று இயற்கைப் பாலூட்டல் வலியுறுத்தப் படுவதில்லை. சிறுவர் வைத்தியத்திற்குரிய அமெரிக்க எகடமி கூறும் கீழ்வரும் தகவல் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஐக்கிய அமெரிக்கா மாத்திரம் இந்த இயற்கையான பாலூட்டலைப் பின்பற்றுமாயின் அது வருடாந்தம் 3600 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்த முடியும். இதன் மூலம் பெரும் பொருளாதார வளத்தை, பல அபிவிருத்தி திட்டங்களுக்குச் செலவிடலாம்.

தாய்ப்பாலூட்டல் சூழல் பாதுகாப்புக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புட்டிப் பால் பொதி செய்வதற்காக தகர, கண்ணாடி போத்தல்கள் உற்பத்தி செய்வதனூடாகவும் பசுப்பாலை உலர்த்துவதனூடாகவும் ஏற்படும் சூழல் மாசடைவு புட்டிப்பாலை பாவித்ததன் பின்னர் அதன் தகர, கண்ணாடிக் குவலைகளால் ஏற்படும் பாதிப்பு என்பன சமூக ரீதியாகப் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

வில்லியம் மெக்டோகல் எனும் அறிஞர் கூறும் போது, 'இன்றைய சமூகம் புட்டிப்பாலின் அடிப்படையில் வளர்ந்துள்ளதையே நான் காண்கின்றேன். எனவே வன்முறைகளும் விரக்தியும் உறவுகளில் பூசலும் ஜீவகாருண்ய மின்மையும் வெளிப்படவே செய்யும். குழந்தை பால் குடிக்கும் போத்தலை சட்ட ரீதியாக தடைசெய்யும் போதுதான் இப்பிரச்சினைகள் தீரும்' என்கின்றார்.

 தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி

தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி தொடர்பாக சர்வதேச சுகாதார நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் பாலருந்தும் குழந்தைகளிடத்தில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் அது இரண்டு வருடங்களாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளன. ஏனெனில் குழந்தையின் முதலிரு வருடங்களில் தாய்ப்பாலின் மீது மிக முக்கிய தேவையுடையதாக அது இருக்கும். இரு வருடங்களுக்கு முன்பு அதன் உறுப்புக்களால் தானாக எதிர்த்து நிற்க முடியாது.

உலக சுகாதார நிறுவனம் 2001 ஆம் ஆண்டு "Complementary feeding" என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடாத்தியது. அதன் இறுதியில் பின்வருமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

"The first two years of a child’s life are a critical window during which the foundations for healthy growth and development are built. Infant and young child feeding is a core dimension of care in this period"

"ஒரு குழந்தையின் வாழ்வில் முதலிரு வருடங்கள் என்பது அதனது ஆரோக்கியமான வளர்ச்சி, விருத்தி கட்டியெழுப்பப்டும் மிக முக்கியமான காலப்பகுதியாகும்.

குழந்தையும் சிறு பிள்ளையினதும் தாய்ப்பாலூட்டல் இக்காலப்பகுpதியில் அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய அம்சமாகும். "(Complementary feeding, Report of the global consultation, Geneva, 10-13 December,2001)"

அல்-குர்ஆன் சூறதுல் பகரா - 233 ஆம் வசனத்தில் விபரித்துள்ள கருத்துக்களையே மேற்சொன்ன அறிக்கையும் விபரிப்பதைக் காணலாம்.

இந்த வகையில் அல்-குர்ஆன் மிகத் தெளிவாக முன்வைக்கும் தாய்ப் பாலூட்டுவதற்கான கட்டளையை, பிள்ளைக்கான அந்த உரிமையை கட்டாயமாகத் தாய்மார்கள் பின்பற்ற வேண்டும். நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இக்கருத்தை அறிவியல் பூர்வமாகவே நிறுவுகின்றன. எனவே, இவற்றை சீர்தூக்கிப் பார்த்து, தாய்மார்கள் செயற்படுவதற்கு தாய்மார்கள் முன்வருவார்களாக.

புதையுண்டு போன'ஆத்' சமுதாயத்தினர்


(நபியே) இவை(சிற்)சில ஊர்களின் வரலாறுகள் ஆகும் இவற்றை நாம் உமக்கு எடுத்திரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன சில(அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின. (அல்-குர்ஆன் 11:100)

1990 ம் ஆண்டு ஆரம்பத்தில் மிக பிரபலமான பத்திரிக்கைகள், 'உபர்' என்ற பகுதியில் மணல் திட்டுகளுக்குள் சுமார் 12 மீட்டர் ஆழத்தில்."புதையுன்ட ஒரு அரபு நகரம் கண்டுபிடிக்கபட்டது" என்ற செய்தியை வெளியிட்டது. அது இறைவனின் கோபதிற்கு உள்ளான 'ஆத்' சமூதாயத்தினர் வாழ்ந்த நகரம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களாள் கண்டரிய பட்டது.
யார் அந்த 'ஆத்'சமூகத்தார்கள்?
நபி நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது 'ஆது' சமூகத்தினர்.
அவர்களுக்கு நபி ஹூத்(அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர்,தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இருந்தனர்,அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் வேறு எந்த நாட்டிலும் படைக்க படவில்லை. 

நபி ஹூத் (அலை) அவர்களும் மற்ற இறைதூதர்கள் போல இறைவன் ஒருவனே அவனையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற ஓர் இறை கொள்கையை அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைதப் போது. அவர்கள் அதை ஏற்காததும் அவர்களின் பதிலையும் குர் ஆனில் அல்லாஹ் கூருகிறான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது'' நீங்கள் (இறைவனை) அஞ்ச மட்டீர்களா? '' என்று கூறிய போது
'நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய (இறை) தூதன் ஆவேன்.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.

'மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்கு கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
'நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?''
'இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று,(அழகிய வேலைப்பாடுகல் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கிறீர்களா?.''
'' இன்னும், நீங்கள்(எவரையும் ஏதங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல பிடிக்கின்றீர்கள்.
'எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.''
னால் 'ஆத்' சமுதாயதினரின் பதிலோ 
(இதற்கு) அவர்கள் '' நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டிமே) எங்களுக்கு சமம்தான்'' எனக் கூறினார்கள்.
'இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
'' மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மா ட்டோம்.'' (இவ்வாறு கூறி) அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள் ஆதலின் நாம் அவர்களை அழித்தேம் நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. (26:124-140)
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து இறை தூதரை நம்ப மறுத்ததோ,அவர்களுக்கு எச்சரிக்கபட்டது போல இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கினான், 

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வேகமாக வருவதைக் கண்டதும்,'' இது நமக்கு மழையை பொழியும் மேகமாகும்'' என கூறினார்கள் ''அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அது தான்(இது கொடுங்)காற்று

இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது.(46:24)ஆத் கூட்டத்தார்கள் தங்களுக்கு வேதனை தரும் பேரழிவு கண்முன் கொண்டுவரபடுவது அறியாமல், அதை மழை தர கூடிய மேக கூட்டங்களாக நினைத்தனர் ஏனெனில் பாலை மணல் வெளியில் உருவாகும் சுழல் காற்றானது தொலைவில் இருந்து பார்பவைகளுக்கு அடர்ந்த மழை தரும் கார்மேகங்கள் போலவே கட்சி அளிக்கும். ஆராய்சியாளர் டோ(Doe) அவர்கள் கூறுகையில் , முதல் அரிகுறியாக மணல் ஆயிரம் அடிகளுக்கு மேல் கற்றில் உயர்த்த பட்டு நீண்ட சுவர் போன்ற தோற்றத்தை கொடுக்கும், பின்பு கற்றின் வேகம் அதிகரித்து வட்ட வடிவில் சூராவளி பெரும் ஓசையுடன் சுழழும்.
மேலும் அல்லாஹ் திருமறையில்
இன்னும்,ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்,எனவே அந்த சமுகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
ஆகவே, அவர்களின் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (69: 6,7,8)
மீளவே முடியாத பயங்கரமான சுழன்று அடித்த மணல் காற்றினால் அழிக்கபட்டு அச்சமுதாயத்தினர் மண்ணில் உயிருடனே புதையுண்டு போனார்கள். 


அகழ்வராய்ச்சியில் அந் நகரம் கண்டுபிடிக்கபட்டதை காண்போம்,
நிக்கோலக் க்லாப் இவர் ஒர் அனுபவமிக்க தொல்பொருள் ஆரய்ச்சியாளர் மட்டுமின்றி, திருமறையில் கூறப்பட்ட'ஆத்' சமூகத்தார் வாழ்ந்த(யுபர்) நகரை பெரும் முயற்சிக்கு பிறகு கண்டுபிடித்தவர் கூட,
அதற்க்கு அவர் இரண்டு வழிகளில் தன் முயற்சியை மேற்கொன்டார். ஒன்று NASA மூலம் குறுப்பிட்ட அந்த பகுதியை சாட்டிலைட் உதவியுடன் படம் பிடிக்க விண்ணப்பித்தார்,
இரண்டாவதாக கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான வி ளங்கங்கள்(manuscripts) பற்றி படிக்களானார்,எப்படியாவது அந்த நில அமைப்பின் வரைபடத்தை கண்டுபிக்கவேண்டும் என்பதின் முயற்சியின் பலனாக, கி.பி 200 ஆண்டு கிரீக்-எகிப்த் புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் அவருக்கு கிடைத்தது.

அதற்கிடையில் NASA வில் இருந்து அவர் கேட்ட சாட்டிலைட் புகைபடம் கிடைக்கவே.அதில் குறுப்பிட்ட நில அமைப்பில் நிலத்திலிருந்து வெரும் கண்களால் காண முடியாத, முழு நில அமைப்பையும் வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிய கூடிய நீண்ட வால் போன்ற தடம்(caravan) காணபட்டது,
அவரிடம் இருந்த பழைய வரைபடத்தயும் NASA வில் இருந்து கிடைத்த வால் பேன்ற அமைப்பான புகைபடத்தயும் வைத்து, குறுபிட்ட அந்த பகுதியில் ஒரு நகரம் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.



இருதியாக திருமறையில் கூறபட்ட 'ஆத்' சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுன்ட நகரம் தோன்டும் பனி தொடங்கியது.
சரி.. அந்த நகரம் 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என்பதற்கு என்ன ஆதாரம்?
அந்த நகரம் தோன்டும் பனி பாதி நிரைவடைந்த நிலையில் அது 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என கண்டறியபட்டது ,அகழ்வாரய்ச்சியா ளர் Dr.ஜரின்ஸ் கூருகையில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இது 'இரம்' நகரம் என்பதற்க்கு சான்றாகும் ஏனெனில்,' இரம்' நகரம் உயரமான் தூண்களை உடையதாக இருக்கும் என்று திருமறையில் அந்த நகரை பற்றி இறைவன் குறுப்பிடுகிறான்

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படக்கப்படவில்லை. (89:6-8)



மேலும் ஏழு இரவுகளும், எட்டு பகலாகவும் அவர்கள் மீது மணல் காற்றால் சூழபட்டார்கள் என்ற இறை வசனத்தின் படி. தோண்டி எடுக்கபட்ட நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடபட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.


'ஆத்' சமுதாயத்தை ,நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக, வல்ல இறைவன் திருமறையில் கூறுகிறான்
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாமாகப் பெருமையடித்துக் கொண்டு,'' எங்களை விட வலிமை மிக்கவர்கள் யார்?''என்று கூறினார்கள் அவர்களை படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
(Surah Fussilat:15) 


எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு, அவனின் கோபதிற்க்கு ஆலாகாத இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற சமுதாயமாக நம்மை ஆக்கவேண்டும் என் அல்லஹ்வை பிராத்திப்போமாக.