“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

மனிதப்படைப்பின் படிநிலைகள்

மனிதப்படைப்பின் படிநிலைகள் (அ)
பேராசிரியர் மூர் அவர்கள் வளரும் மனிதன்|எனும் புகழ் பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்கள்.  கனடாவிலுள்ள டோரோண்டோ பல்கலைக்கழத்தில் உடற்கூறு இயல் மற்றும் செல் இயங்கியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். அவர் பாகல்டி ஆப் மெடிசினில் அடிப்படை அறிவியல்கள் துறையில் டீன் ஆகவும் இருந்தார். எட்டு வருடங்களாக உடல் கூறு இயல் துறையின் தலைவராகவும் இருந்திருக்கின்றார். டாக்டர் மூர் அவர்கள் கனடாவிலுள்ள வின்னிபெக் பல்கலைக்; கழகத்திலும் பதினொரு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். பல பன்னாட்டு உடல்கூறு இயல் நிபுணர்களின் கூட்டமைப்புக்களுக்கும் உடல் இயங்கியல் அறிவியலாளர்களின் கூட்டமைப்பிற்கும் தலைமை தாங்கியுள்ளார்.  பேராசிரியர் மூர் அவர்கள்
Royal Medical Association of Canada.
The International Academy of Cytology.
The Union of American Anatomists.
The Union of North and South American Anatomists
ஆகிய அமைப்புக்களின் உறுப்பினராகவும் தேர்ந்;தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் உடல் இயங்கியல் துறையில் மிகவும் புகழ் பெற்ற விருதான து.ஊ.டீ.புசயவெ யுறயசன என்ற விருதை 1984ம் ஆண்டு கனடா உடல் இயங்கியலாளர்கள் அசோசியனிடமிருந்து பெற்றார்.
ஊடiniஉயட யுயெவழஅல யனெ நுஅடிசலழடழபல ஆகிய துறைகளில் அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவைகளில் எட்டு புத்தகங்கள் மருத்துவ பள்ளிகளில் குறிப்புப் புத்தகங்களாக உபயோகிக்கப்படுகின்றன மேலும் அவைகள் ஆறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனுடைய வசனங்கள் மற்றும் நபியின் பொன்மொழிகள் ஆகியன பற்றி அவருடைய ஆராய்ச்சியை நமக்குத் தரும்படி அவரிடம் கேட்ட போது அவர் மிகவும் வியந்தார். அறிவியலாளர்கள் கடந்த முப்பதாண்டுகளில் மாத்திரமே தெரிந்து கொண்ட விசயங்களை, எவ்வாறு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கருவையும் அதனுடைய வளர்ச்சிப் படிகளையும் அத்தனை துல்லியமாகவும் விவரமாகவும் கூற முடிந்தது என ஆச்சரியத்திற்குள்ளானார். மிக விரைவாகவே பேராசிரியர் மூர் அவர்களின் இந்த ஆச்சரியமானது வேத வெளிப்பாடு, நேர்வழி ஆகியவற்றின் மேலுள்ள மதிப்பாக மாறிப் போனது. இந்த கண்ணோட்டத்தை அவர் அறிவுஜீவிகள் மற்றும் அறிவியலாளர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தினார். திருக்குர்ஆனும் நபி மொழியும் நவீன கருவியலுடன் எவ்விதம் ஒத்துப்போகின்றது என்பது குறித்து அவர் ஒரு சொற்பொழிவே ஆற்றியுள்ளார். அதில் அவர் கூறுவதாவது:-
மனித வளர்ச்சி பற்றி திருக்குர்ஆனில் காணப்படும் கூற்றுக்களைப் பற்றி தெளிவுபடுத்த உதவுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த கூற்றுக்கள் அனைத்தும் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்தே அல்லது கடவுளிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில் ஏறக்குறைய இந்த அறிவு அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு பிற்பாடே கண்டு பிடிக்கப்பட்டது. முஹம்மது அவர்கள் நிச்சயாக அல்லாஹ்வின் தூதராகவே இருந்திருக்க வேண்டும் என்பதை இது எனக்கு நிரூபிக்கின்றது.
மிகவும் புகழ் பெற்ற மரியாதைக்குரிய கருவியல் துறையின் அறிவியலாளர் அவர் துறை சம்பந்தப்பட்ட திருக்குர்ஆனின் வசனங்களை ஆராய்ச்சி செய்த பின்னர் அறிவிப்பதையும் மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவருடைய முடிவையும் யோசித்துப் பாருங்கள்.
மனிதனின் படைப்பில் உள்ள படிநிலைகளை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான் :-
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (திருக்குர்ஆன் 23:12-14)
அலக்கா|என்ற அரபி வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. முதல் அர்த்தம் அட்டைப் பூச்சி|என்பதாகும். இரண்டாவது அர்த்தம் : மிதந்து கொண்டிருக்கும் ஒன்று|என்பதாகும். மூன்றாவது அர்த்தம் இரத்தக் கட்டி என்பதாகும்.
fig 3.1
சாதாரண தண்ணீரிலிருக்கும் அட்டைப்பூச்சியை அலக்கா படிநிலையுடன் பேராசிரியர் மூர் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்த போது அவைகளுக்கிடையே மிகப்பெரும் ஒற்றுமையை கண்டார். அலக்கா படிநிலையின் போது கருவானது அட்டைப்பூச்சியைப் போன்ற தோற்றத்தை அடைகின்றது என்று அவர் கண்டு கொண்டார். கருவின் ஒரு படத்தையும் அட்டைப்பூச்சியின் ஒரு படத்தையும் அருகருகே வைத்தார். இந்த படங்களை பல மாநாடுகளில் அறிவியலாளர்களுக்கு அவர் காண்பித்தார்.
அலக்காவின் இரண்டாவது அர்த்தம் மிதந்து கொண்டிருக்கும் ஒன்று|| என்பதாகும். இதுதான் அலக்கா படிநிலையின் போது கருவானது தாயின் கர்ப்ப அறையில் மிதந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். அலக்காவின் மூன்றாவது அர்த்தம் இரத்தக் கட்டி என்பதாகும். பேராசிரியர் மூர் அவர்கள் கூறியது போல் கருவானது அலக்கா படிநிலையில் பல வகையான உள் மாற்றங்களுக்குள்ளாகின்றது. மூடப்பட்ட நாளங்களின் வழியாக இரத்த ஓட்டம் உருவாகுதல் போன்றவைகள் உருவாகி, வளர்சிதை மாற்றங்கள் தொப்புள் கொடிவழியாக முடிவாகும் வரை மாறுதலுக்கு உள்ளாகுகின்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அலக்கா படிநிலையின் போது அது அட்டைப் பூச்சி போன்று தோன்றுவதோடல்லாமல், இரத்தம் மூடப்பட்ட நாளங்களில் (-ஓடாமல்) அப்படியே பிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அது இரத்தக்கட்டி போன்ற தோற்றத்தை அடைகின்றது. இரண்டும் விளக்கங்களும் அற்புதமான முறையில் அலக்கா எனும் ஒரே வார்த்தையால் திருக்குர்ஆனால் அளிக்கப்படுகின்றது.
முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வகையில் அதை அறிந்திருக்க முடியும்? பேராசிரியர் மூர் அவர்கள் கருவை அதன் முத்கா (சுவிங்கத்தை சப்புவது போன்று கடித்துச் சப்பப்பட்ட ஒன்று) படிநிலையிலும் ஆராய்ந்தார். அவர் களி மண்ணை எடுத்து வாயில் வைத்து அதை சப்பிய பிறகு அத்துடன் முத்கா நிலையிலுள்ள கருவினோடு ஒத்துப் பார்த்தார். முத்கா படிநிலையில் கரு சப்பப்பட்ட பொருளின் தோற்றத்தை மிகவும் சரியாக ஒத்திருக்கின்றது என்பதை கண்டார். பல கனடா இதழ்கள் பேராசிரியர் மூர் அவர்களின் விபரங்களை பிரசுரித்தன. திருக்குர்ஆனில் ஆயிரத்து நானுறு வருடங்களாக இருந்து வரும் கூற்றுக்கள் தற்கால நவீன அறிவியலுடன் எவ்விதம் ஒத்துப்போகின்றது என்பது பற்றி மூன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எடுத்துக்காட்டினார். இதன் விளைவாக, பேராசிரியர் மூர் அவர்களிடம் பின் வரும் கேள்வி கேட்கப்பட்டது: – நீங்கள் திருக்குர்ஆனை அல்லாஹ்வின் வாக்குத்தான் என்று நம்புவதாக நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா|? அதற்கு அவர்: அவ்வாறு ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த வித சிரமுமில்லை| என்று பதிலளித்தார். நீங்கள் இயேசுவை நம்பியிருக்கும் போது முஹம்மதுவை எவ்வாறு நம்ப முடியும் என்று கேட்கப்பட்ட போது அவர் இரண்டுமே ஒரே பள்ளியிலிருந்து வந்தவைதான் என்று நான் நம்புகின்றேன்| என்று அவர் பதிலளித்தார்.
fig 3.2
உலகிலுள்ள நவீனகாலத்து அறிவியல் அறிஞர்கள் அனைவரும் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இறக்கியருளப்பட்டதுதான் என்பதை தெரிந்து கொள்ள முடியும். வல்லமைமிக்க அல்லாஹ் கூறுவது போன்று: அல்லாஹ் இறக்கியருளியதை அவனுடைய சொந்த அறிவிலிருந்தே இறக்கியருளியுள்ளான் என்று அவன் சாட்சி கூறுகின்றான்| (திருக்குர்ஆன் 4:166)
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று ஏற்றுக் கொள்வதில் நவீன காலத்து அறிவியலாளர்களுக்கு எந்த வித சிரமுமில்லை என்று இதிலிருந்து தெளிவாகின்றது.
மனித படைப்பின் படிநிலைகள்; (ஆ)
பேராசிரியர் கீத் மூர் அவர்;களால் எழுதப்பட்ட வளரும் மனிதன்|| எனும் புத்தகம் எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் அறிவியல் குறிப்புப் புத்தகமாக கருதப்படுகின்றது மேலும் ஒரே ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம் என்று அமெரிக்காவிலுள்ள சிறப்புக் கமிட்டியினரால் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியரை நாம் சந்தித்து அவருடைய துறையான கருவியல் சம்பந்தப்பட்ட பல திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீதுகளையும் நாம்; அளித்தோம்.
நாம் அளித்த ஆதாரங்களில் பேராசிரியர் மூர் அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். நாம் அவரிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டோம்:- மத்திய காலகட்டத்தில் கருவியல் பற்றிய அறிவியலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அது பற்றி மிக மிக குறைவாகவே தெரிந்திருந்தது என்று தங்களின் புத்தகத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதே நேரத்தில் திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு அல்லாஹ் அவருக்கு அருளியதைக் கொண்டு மக்களை அவர் வழி நடத்திக் கொண்டிருந்தார். மனிதனின் படைப்பு பற்றியும் மனித வளர்ச்சியின் பல படிநிலைகள் பற்றியும் திருக்குர்ஆனில் மிகவும் விபரமான விளக்கங்கள் காணப்படுகின்றன.
தாங்களோ உலகப் புகழ் பெற்ற அறிவியலார் ஆவீர்கள், அகவே தாங்கள் ஏன் இந்த உண்மைகளை தங்களின் புத்தகத்தில் குறிப்பிட்டு நீதியை நிலைநாட்டக் கூடாது? என்று கேட்டோம். அதற்கு அவர்: உங்களிடம்தான் ஆதாரங்கள் உள்ளன: என்னிடம் இல்லை. அதை ஏன் எங்களிடம் நீங்கள் கொடுக்கக்கூடாது? என்று பதிலளித்தார்.
நாங்கள் உண்மைகளை அவரிடம் கொடுத்தோம். பேராசிரியர் மூர் அவர்கள் தான் ஒரு மிகப்பெரும் அறிஞர்தான் என்பதை செயலில் காட்டினார். அவருடைய புத்தகத்தின் மூன்றாம் பதிப்பில் அவர் சில சேர்ப்புக்களைச் செய்தார். நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இந்த புத்தகம் ரசியன், சைன, ஜப்பானிய, ஜெர்மனிய, இத்தாலிய, போர்த்துக்கீசிய, யூகோஸ்லாவிய மொழிகளில் – எட்டு மொழிகளில் – மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மத்திய காலங்களைப் பற்றி பேராசிரியர் மூர் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில்:- மத்திய கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சி மிகவும் பின்தங்கியிருந்தது. அக்காலத்தில் கருவியலின் சில கருத்துக்கள் குறித்து செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகள் நமக்கு தெரியும். ஆண் பெண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் கலவையிலிருந்தே மனிதர்கள் உருவாக்கப்படுகின்றார்கள் என்று முஸ்லிம்களின் புனித வேதமான திருக்குர்ஆன் கூறுகின்றது. இந்திரியத்துளியிலிருந்து மனிதன் படைக்கப்படுகின்றான் என்பதற்கான பல குறிப்புக்கள் வருகின்றன. அவ்வாறு வரும் அந்த ஒன்று ஆறு நாட்களுக்குப் பிறகு பெண்ணில் ஒரு விதையைப் போன்று தங்கி விடுகின்றது என்று மேலும் கூறப்படுகின்றது.
Fig 4.1
இந்திரியத்துளி இரத்தக் கட்டியாகவும் வளர்ச்சியடைகின்றது எனவும் திருக்குர்ஆன் கூறுகின்றது. (ஊன்றப்பட்ட கருவோ அல்லது தானாக அபார்சனாகிப் போன கரு இரத்தக் கட்டியைப்போன்றே தோன்றும்.) கரு, அதன் தோற்றத்தில், அட்டைப்பூச்சியைப் போன்றோ அல்லது இரத்த உறிஞ்சியைப் போன்றோதான் தோன்றுகின்றது. கரு -சுவைக்கப்பட்ட ஒன்றைப் போன்று – பசை அல்லது மரம் – இருப்பதாக சொல்லப்படுகின்றது. (சுவைக்கப்பட்ட பொருளில் உள்ள பற்களின் அடையாளங்களை கரு முதுகந்தண்டு ஒத்துள்ளது.)
வளரும் கரு 40 அல்லது 42 நாட்களில் மனிதனாக கருதப்படுகின்றது. இந்தப் படிநிலையில் அது மேலும் மிருகக் கருவைப் போன்று தோன்றுவதில்லை. (மனித கரு மனித குணங்களை இந்தப் படிநிலையில்தான் பெறுகின்றது.) கரு மூன்று இருள் திரைகளுக்குள் வளர்கின்றது என்று குர்ஆன் கூறுகின்றது. இது ஏறக்குறைய 1 – தாயின் முன்புற வயிற்றுச் சுவர் 2 – கருப்பைச் சுவர் 3 – அமினோகோரினிக் சவ்வு அகியவற்றைக் குறிப்பிடுகின்றது. இடப்பற்றாக் குறையினால், பிறப்புக்கு முந்தியுள்ள மனித வளர்ச்சி பற்றி திருக்குர்ஆனில் கூறப்படும் மேலும் பல சுவையான குறிப்புக்களைப் பற்றி விவாதிக்க முடியவில்லை.
Fig 4.3
இதுதான் டாக்டர் மூர் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளவை. அவருடைய அந்தப் புத்தகம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த உண்மைகளை அவருடைய புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதை அறிவியல் அறிவு அவருக்கு கடமை ஆக்கி விட்டது. தற்பொழுது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் நவீன கால கருவளர்ச்சி படிநிலைகள் எளிமையானதோ அல்லது மிகவும் விரிவானதோ அல்ல என்ற முடிவிற்கு டாக்டர் மூர் அவர்கள் வருகின்றார்கள். அந்தப் படிநிலைகள் கருவளர்ச்சியை புரிந்து கொள்ள உதவுவதில்லை ஏனெனில் அவைகள் படிநிலை 1, படிநிலை 2, படிநிலை 3 என்று எண்களாக வருகின்றன. திருக்குர்ஆனில் அருளிச் செய்யப்பட்டுள்ள படிநிலைகள் எண்ணிக்கை முறையைச் சார்ந்திருக்கவில்லை. அவைகள், கரு வளர்ந்து செல்லக்கூடிய ஒவ்வொரு நிலையையும் தெளிவானதும் மிகவும் எளிமையாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய உருவங்களை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பிறப்பிற்கு முந்தியுள்ள வளர்சியை திருக்குர்ஆன் பின்வருமாறு அடையாளப்படுத்துகின்றது: – நுத்பா இதன் அர்த்தம் ஒரு துளி|அல்லது மிகக் குறைந்த அளவு நீர்|: அலக்கா இதன் அர்த்தம் அட்டைப் பூச்சியைப் போன்ற ஒரு பொருள்|: முத்கா இதன் அர்த்தம் சுவைக்கப்பட்டது போன்ற ஒரு அமைப்பு|: இத்காம் இதன் அர்த்தம் எலும்புகள் அல்லது எலும்புக் கூடு என்பதாகும். கிஸாவுல் இத்காம் பில் லஹம் இதன் அர்த்தம் எலும்புகளை சதையாலோ அல்லது இறைச்சியாலோ மூடுவது: அல் நச்அ இதன் அர்த்தம் வேறு ஒரு கருவாக உருவாக்குதல். பிறப்பிற்கு முந்தியுள்ள பல்வேறு வித்தியான படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டே திருக்குர்ஆனின் இந்த பகுப்புக்கள் அமைந்துள்ளன என்று பேராசிரியர் மூர் அவர்கள் கண்டு கொண்டார். இந்த பகுப்புக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதும் நடை முறைக்கு மிகவும் உகந்ததுமான அழகான விஞ்ஞான விபரங்களை தருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் பேராசிரியர் மூர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்: தாயினுடைய கர்ப்பப் பையில் அல்லது கருவறையில் கருவானது மூன்று திரைகளால் அல்லது அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது அடுத்த ஸ்லைடில் காண்பிக்கப்படுகின்றது. (அவர் காண்பித்த ஸ்லைடு இப்புத்தகத்தில் கொடுக்கப்படவில்லை). அ – தாயின் முன்புற வயிற்றுச் சுவர் ஆ – கருப்பைச் சுவர் இ – அமினோகோரினிக் சவ்வு. மனித வளர்ச்சிப் படிநிலைகள் மிகவும் சிக்கலாக இருப்பதாலும், வளர்ச்சியின் போது தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவதாலும், திருக்குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகளை உபயோகித்து புதிய பகுப்பு முறை உருவாக்கப்பட முடியும் என என்னால் பரிந்துரைக்கப்படுகின்றது. பரிந்துரைக்கப்படும் இந்த முறை மிகவும் எளிமையானதும், நன்கு புரிந்து கொள்ளப்படக் கூடியதும் தற்போது உள்ள கருவியல் அறிவியலோடு ஒத்துப் போவதும் ஆகும்.
Fiq 4.4
திருக்குர்ஆனையும் ஹதீதையும் கடந்த நான்காண்டுகளாக தீவீரமாக செய்த ஆராய்ச்சிகள் மனித கரு பகுப்பு பற்றிய புதிய முறையை வெளிப்படுத்தியுள்ளது மிகவும் வியப்பிற்குரியதாகும் ஏனெனில் அவைகள் ஏழாம் நூற்றாண்டில் பதியப்பட்டவைகளாகும். கருவியல் அறிவியலின் நாயகனான அரிஸ்டாட்டில், கி.மு. நான்காம் நூற்றாண்டில் கோழி முட்டைகளை வைத்து ஆராய்ச்சி செய்து கோழியின் கரு ஒவ்வொரு படிநிலையாக வளர்கின்றது என்பதை உணர்ந்திருந்தாலும், அந்த படிநிலைகளைப் பற்றிய எந்த விபரங்களையும் அவர் தரவில்லை. கருவியல் சரித்திரத்திலேயே நமக்குத் தெரிந்த வரை, பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை படிநிலைகள், பகுப்புக்கள் பற்றி மிகவும் குறைவாகவே தெரிந்திருந்தது. இதன் காரணமாகவே, மனித கரு பற்றி திருக்குர்ஆனில் காணப்படும் விபரங்கள் ஏழாம் நூற்றாண்டில் நிலவிய அறிவியல் அறிவை அடிப்படையாகக் கொண்டது என்று கூற முடியாது. இந்த விபரங்கள் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ்வினால் இறக்கி அருள் செய்யப்பட்டது என்பதே அறிவு பூர்வமான முடிவாகும். அவர் அந்த விபரங்களை தெரிந்திருக்கவே முடியாது. ஏனெனில் அவர் கல்வி கற்காத எந்தவொரு அறிவியல் பயிற்சியும் இல்லாத மனிதர்.
நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனாலும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீதுகளிலிருந்து நாங்கள் தங்களுக்கு அளித்த கருவியல் சம்பந்தமான உண்மை மற்றும் ஆதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது தாங்கள் அளித்த விபரங்கள் மிக மிக குறைவானது. ஆகவே, தாங்கள் நிபுணத்துவம் பெற்ற இந்த துறை சம்பந்தமான அனைத்து திருக்குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ஏன் நீதி செய்யக்கூடாது? என அவரைக் கேட்டோம்.
நிபுணத்துவம் மிக்க அறிவியல் புத்தகம் ஒன்றில் தகுந்த பல இடங்களில் பொருத்தமான பல குறிப்புக்களை சேர்த்திருப்பதாக பேராசிரியர் மூர் அவர்கள் பதிலளித்தார். ஆயினும், இஸ்லாம் இது பற்றி கூறுபவைகளை புத்தகத்தில சேர்ப்பதற்கு நம்மை அழைத்துள்ளார். இது சம்பந்தப்பட்ட அனைத்து திருமறை வசனங்களையும் ஹதீதுகளையும் மேலும் அவைகளின் பல்வேறு அற்புத தன்மைகளையும் கோடிட்டு காட்டுமாறும் அவைகளை அந்த புத்தகத்தில் பொருத்தமான இடங்களில் சேர்ப்பதற்காகவும் கூறினார்.
இது நிறைவேற்றப்பட்டது. இந்த இஸ்லாமிய சேர்ப்புக்கள் இணைக்கப்பட்ட அவருடைய புத்தக பிரதிக்கு அவர் முன்னுரை எழுதியுள்ளார். அதைத்தான் தாங்கள் தங்கள் முன் காண்கின்றீர்கள். கருவியல் பற்றிய அறிவியல் உண்மைகள் வரும் ஒவ்வொரு பக்கத்திலும், அது சம்பந்தமான திருமறை வசனங்களையும் ஹதீதுகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளோம். திருமறை குர்ஆனிற்கும் நபிமொழிகளுக்கும் இணையாக எதுவும் இல்லை என்பதை இது நிரூபிக்கின்றது. புதிய தளங்களிலுள்ள நீதிமிக்க பாராபட்சமற்ற மனிதர்களின் மூளைகளில் இஸ்லாம் நுழைந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் தற்போது கண்டு கொண்டிருக்கின்றோம்.
Fiq 4.5

No comments:

Post a Comment