“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

சகுனம் பார்த்தல்

ஜோதிடம் , நல்லநாள் , கெட்டநாள் , நட்சத்திரம் பார்த்தல் , சகுனம்
பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.
நாட்களிலோ,நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும்
கிடையாது. முற்றிலும்
தீமை பயக்கக் கூடியதும் கிடையாது.
எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை
அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.
ஒரு குறிப்பிட்ட நாள்
நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும்
சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ ,
துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக்கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.
எந்த நாள் கெட்டநாள் என்று சிலரால்
ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம்பெற்றவர்கள் , பொருள்
வசதியடைந்தவர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாமிய
வரலாற்றிலிருந்து கூட
இதற்கொரு உதாரணத்தைக் கூறலாம்.
முஹர்ரம் மாதம்
பத்தாம் நாள் ஃபிர்அவ்ன்
அழிக்கப்பட்டு , மூஸா (அலை) அவர்கள்
காப்பாற்றப்பட்டனர்.
அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி)
படுகொலை
செய்யப்பட்டார்கள்.
மூஸா நபி காப்பாற்றப்பட்டதால்
அதை நல்ல நாள் என்பதா ?
ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால்
அதைக் கெட்ட நாள் என்பதா ?
நாட்களுக்கும் , நல்லது கெட்டது ஏற்படுவதற்கும்
எந்தச்சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
‘ இந்தக் காலங்களை மக்களிடையே நாம்
சுழலச் செய்கிறோம் ‘.
அல்குர்ஆன் 3 :140
சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும் , மேல்பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு
சிலரை மேலாகவும் சிலரைக்கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.
‘ நன்மை தீமை யாவும்
அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன் ‘ என்ற உறுதி மொழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதிமொழிக்கு முரணாகும்.
ஒரு நாள் , நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ்
தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர
எவராலும் அறிய முடியாது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்லநாட்கள் என்று கூறவில்லை.
அல்லாஹ்வின் தூதரும்
கூறவில்லை.
அல்லாஹ்வும் , அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால்எப்படி அறிய முடியும் ?
இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்லநாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு
மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன்
எழுதியதைப்பார்த்து நல்ல நாட்களைத்
தீர்மானிக்கிறோம்.
நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான்
என்று அறிந்து கொண்டான் ? இதைச்
சிந்திக்க வேண்டாமா ?
வருங்காலத்தில்
நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும் சோதிடமும்
ஒன்று தான்.
ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் சென்று எனக்கு நல்லநாள் ஒன்றைக் கூறுங்கள்
என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால்
அவனது நாற்பது
நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 4137
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன்
கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு
அருளப்பட்ட மார்க்கத்தை அவன்
நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.
நூல் : அஹ்மத் 9171
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
உலகத்துக்கெல்லாம் நல்லநாள் கணித்துக் கூறக்கூடியவகளின் நிலைமையைப்
பாருங்கள்!
வறுமையிலும் , தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும் , மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம்
காணலாம்.
இவர்கள் தங்களுக்கு என்று விஷேசமான
நல்லநாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள
முடிந்ததா ? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்தே தெளிவாகவில்லையா ?
முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த நல்ல
காரியங்களையும்
செய்யலாம். நாள் நட்சத்திரம் , சகுனம் , ஜோதிடம் ஆகிய
அனைத்திலிருந்தும் விலகிக்கொள்வது அவசியமாகும்.

No comments:

Post a Comment