“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

திருமண துஆ

நமது நாட்டில் வழக்கமாக
திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர்.
அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா….. என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள்நாயகம்(ஸல்)
காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ,
தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின்
காலத்திலோ நடைமுறையில்
இருந்ததில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த
சிலரது கண்டுபிடிப்பாகும் இது.
ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்-
ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில்
பல நபிமார்களின் இல்லறம் போல்
வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக
இந்த துஆ அமைந்துள்ளது.
அந்த நபிமார்களும் அவர்களின்
மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ,
அவர்களின் மனைவியர்
அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது.
அவர்களின் இல்லறம்
எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக்
கேட்பது அர்த்தமற்றதாகும்.
” உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ
பின்பற்ற வேண்டாம் ”
அல்குர்ஆன் 7:38

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.
மணமக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச்
செய்துள்ளனர்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த
செய்தியை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் கூறிய போது ‘பாரகல்லாஹு லக’ (அல்லாஹ்
உனக்கு பரகத் – புலனுக்கு எட்டாத
பேரருள் – செய்வானாக) எனக் கூறினார்கள்.
நூல்:புகாரி 5155,6386
இதை ஆதாரமாகக்
கொண்டு பாரகல்லாஹு லக’ என்று கூறி வாழ்த்தலாம்.
‘பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும்’ என்று கூறுமாறு நபிகள்
நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது.
நூல்:அஹ்மத் 15181
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும்
போது ‘பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’ என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599

‘அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில்
உங்கள் இருவரையும்
ஒன்று சேர்ப்பானாக’ என்பது இதன்
பொருள்.
ஒவ்வொருவரும் இந்த
துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.

No comments:

Post a Comment