“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

ஆதமே மனிதர்களின் தந்தை

நபி மொழிகளில் நவீனவிஞ்ஞானம்

3334 عَنْ أَنَسٍ يَرْفَعُهُ إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ  رواه البخاري
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : (மறுமையில்நரகவாசிகளிலேயே மிக லேசானவேதனை தரப்படுபவரிடம், ''பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம்என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்தவேதனையிலிருந்து விடுதலை பெறவும்நீ முன் வருவாய் அல்லவா?'' என்று அல்லாஹ்கேட்பான்அதற்கு அவன், ''ஆம்'' என்று பதிலளிப்பான்அப்போது அல்லாஹ்''நீஆதமின் முதுகந் தண்டில் (கருவாகாமல்இருந்த போது இதை விடஇலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்இணைகற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னைஅனுப்பிய போதுஎனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீஒப்புக்கொள்ளவில்லை'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)   நூல் : புகாரி (3334)
மேற்கண்ட ஹதீஸ் இணைவைத்தல் எவ்வளவு கடுமையான பாவம் என்பதைஉணர்த்துகிறதுமறுமை நாளில் இப்பூமியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஈடாகக்கொடுத்தாலும் இணைவைப்பவனின் நரக வாழ்க்கை முடிவுறாதுஅவ்வளவுகொடுங்குற்றம் இறைவனுக்கு இணைவைக்கின்ற பாவம்.
மேற்கண்ட நபி மொழியில் மற்றுமொரு மாபெரும் அறிவியல் உண்மை புதைந்துகிடக்கிறதுபல நூறு ஆண்டுகள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டறிந்த ஒருஉண்மையை  இறைவனின் உண்மைத் தூதர் முஹம்மது நபியவர்கள் எவ்வித விஞ்ஞானவளர்ச்சியும் இல்லாத காலத்தில் அந்த உண்மையை எடுத்துரைக்கிறார்கள்நிச்சயமாகமுஹம்மது நபியவர்கள் இந்த வார்த்தைகளை அவர்களாக கூறியிருக்க முடியாது.இவை இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட இறைச்செய்திகள்தான் என்பதற்குஇன்றைய விஞ்ஞானம் சான்றாகத் திகழ்கிறது.
அந்த வார்த்தைகள் என்னஇதோ அந்த சத்திய வார்த்தைகள்
''நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்இருந்த போது இதை விடஇலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்இணைகற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன்''
மேற்கண்ட நபியவர்களின் வார்த்தைகளில் இவ்வுலகில் பிறந்த மனிதர்கள்அனைவரும் ஆதம் அவர்களின் முதுகந்தண்டிலிருந்து அதாவது ஆதம் நபியவர்களின்இந்திரியத்திலிருந்து பிறந்தவர்கள்தான் என்ற உண்மை வெளிப்படுகிறது.
உலக மக்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள்தான்என்பதை திருமறைக் குர்ஆனும் உறுதிப்படுத்தியுள்ளது.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا  (4: 1(
மனிதர்களேஉங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனைஅஞ்சுங்கள்அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்அவ்விருவரிலிருந்துஏராளமான ஆண்களையும்பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்எவனைமுன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்தஅல்லாஹ்வை அஞ்சுங்கள்உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ்உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
 (அல்குர்ஆன் 4 : 1)
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ  (49 : 13(
மனிதர்களேஉங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம்உங்க ளில் (இறைவனைஅதிகம் அஞ்சுவோரேஅல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்அல்லாஹ் அறிந்தவன்நன்கறிபவன்.
 (அல்குர்ஆன் 49 : 13)
ஆதம் நபியவர்களின் முதுகந்தண்டிலிருந்து தோன்றிய வாரிசுகள் மூலமாகத்தான்இவ்வுலகில் அனைத்து மனிதர்களும் உருவாகியுள்ளார்கள் என்பதையும் திருக்குர்ஆன்உறுதிப்படுத்தியுள்ளது.
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آَدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ  (7 : 172(
''ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமதுஇறைவன் வெளியாக்கிஅவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான்.நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) ''ஆம்! (இதற்குசாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர்''இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்துவிட் டோம்'' என்றோ, ''இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்;நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்அந்த வீணர்களின்செயலுக் காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்நீங்கள்கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம்.)
(அல்குர்ஆன் 7 : 172)
ஒரு மனிதரிலிருந்துதான் இவ்வுலகில் அனைத்து மனிதர்கள் தோன்றியுள்ளார்கள்என்பதை நபியவர்கள் தம்முடைய வார்த்தைகளின் மூலம் தெளிவு படுத்துகிறார்கள்இதுஎப்படி என்பதை நவீன விஞ்ஞானம் உறுதிப்படுத்துவதைக் காண்போம்.
உயிரினங்கள் அனைத்தும் செல் எனும் நுண்ணிய பகுதியால்ஆக்கப்பட்டுள்ளதாகும்மரம்செடிகொடிதாவரங்கள் அனைத்தும் செல்லின் தொகுப்பே.சுருக்கமாகச் சொல்வதானால் உயிரினத்தின் துவக்கமே செல்தான்.
முக்கியமாக செல் சுவர்அதனை அடுத்து திரவவடிவத்திலான சைட்டோபிளாசம்,அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியாஅதன் மையத்தில் உட்கருவாகத் திகழும்நியூக்ளியஸ் ஆகிய பகுதிகளை முக்கிய அங்கங்களாகக் கொண்டதுதான் ஒரு செல்.மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று செல் சுவாசிப்பதற்குத் துணைபுரிவதாகும்.
இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ் ஒரு செல்லின் மிகமிகமுக்கியப் பகுதியாகும்இந்த உட்கரு இன்றி ஒரு செல் தனது பயணத்தை துவங்கமுடியாதுஇந்த நியூக்ளிஸித்திற்குள் சிறிய துணுக்குகளாக புரோட்டீன்கள் உள்ளன.இதனை குரோமோசோம் என்று கூறப்படும்.
ஒவ்வொரு செல்லினுள் 46 குரோமோசோம்கள் உள்ளனஇந்தகுரோமோசோமத்திற்குள்தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளைபோன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் என்று ஒன்று உண்டு.அதனைச் சுருக்கமாக டி.என்.(DNA)   (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்என்றுகூறப்படும்இது முதன் முதலில் 1953 ஆம் ஆண்டுதான் பிரிட்டனில் காவண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் வாட்சன், (WATSON) க்ரிக் (CRICK)  ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால்கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த டி.என்.. (DNA)  ஆய்வில் பல அறிஞர்கள் ஈடுபட்ட போதுவியக்கத்தக்க பலகோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
வம்ச பரம்பரைச் செய்திகள்பின்வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள்ஒருமனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் என வேறுபட்ட பலசெய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது ஒரு மனிதனின் செல்லில் உள்ள டி.என்.. (DNA)  வில்தான் வம்சபரம்பரைச் செய்திகள்பின்வரும் வாரிசுகள பற்றிய செய்திகள்ஒரு மனிதனைவேறுபடுத்தி அடையாளப் படுத்தும் செய்திகள் பதிவு செய்யப்பட்டடுள்ளன.
அதாவது முதன் மனிதராகிய ஆதம் அவர்களின் டி.என்.. (DNA)  வில்அவருக்கு பின்னால் வரும் அனைத்து வம்ச பரம்பரைச் செய்திகளும்அடங்கியுள்ளனஅதிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தச் செய்திகள்பரவியுள்ளனஎனவே உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஆதம் அவர்களின்முதுகந்தண்டிலிருந்து வெளிப்பட்ட இந்திரியத்தின் அணுவிலிருந்துஉருவானவர்கள்தான் என்ற உண்மை தெளிவாகிறது.
இவ்வாறு வெவ்வேறு செய்திகளைக் குறிப்பிட நியூக்ளிக் அமிலங்கள் கொண்ட பலதொகுப்புகள் இந்த டி.என்..வில் உள்ளதுஇந்த தொகுப்புகளைத்தான் ஜீன் என்றுகுறிப்பிடுகின்றனர்.
கண்காதுமூக்குகைகால் உடலமைப்பு உறுப்புகள் எவ்வாறு எந்த இடத்தில்எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இந்த ஜீன்தான்.முன்னோர்களின் தோற்றம் வாரிசுகளுக்கு ஏற்படுவதற்குக் காரணமும் இந்த டி.என்..வில் உள்ள ஜீன்தான்.
கருவில் வளரும் குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரை அதன் இயக்கம்எவ்வாறு இருக்க வேண்டும்அதன் இரத்த அழுத்தம்பார்க்கும் கேட்கும்விளங்கும்திறன் அனைத்தையும் தீர்மானிப்பது இந்த ஜீன்கள்தான்ஒவ்வொரு வயதிலும்உடலமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதும் இந்த டி.என்.ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருக்கும்.
இந்த ஜீன்களின் தீர்மானத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால் கூட  கண் இருக்கவேண்டிய இடத்தில் காதும்மூக்கு இறுக்க வேண்டிய இடத்தில் வாயும் என மாறிவிடும்மேலும் பல்வேறு பிறவி நோய்கள்பிறவி ஊனங்கள் ஏற்படுவதற்கும்புற்று நோய்தோன்றுவதற்குக் காரணமாகவும் அது அமைகிறது.
இதில் வியப்பு என்ன வெனில் இந்த டி.என்.வில் பதிவு செய்யப்பட்டுள்ளசெய்திகளில் மூன்று விழுக்காடுகள்தான் இதுவரை அறியப்பட்டுள்ளனமீதமுள்ள 97விழுக்காடு செய்திகள் இதுவரை அறியப்படவில்லை என்று விஞ்ஞான உலகம் கையைவிரிக்கிறதுஅவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்?திகைப்பூட்டும் இந்த ஆய்வு இறுதியில் இறைநம்பிக்கையில் போய் முடிகிறதுஅறியமுடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப் பதிந்து வைத்த இறைவனுக்கேவெளிச்சம்.

No comments:

Post a Comment